RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே நிர்வாகம் முடிவு ( RAC ) செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலரான சுனில் குமார் கண்டேல்வால் என்பவர் காத்திருப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ரயில்வேயால் பெரும் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தார்.
இந்தப் புகாருக்குப் பிறகு, ஐஆர்சிடிசியும் ரயில்வேயும் தங்கள் முடிவை தற்போது மாற்றிக்கொண்டுள்ளன .
இதுபோன்ற டிக்கெட்டுகளுக்கு ரயில்வே நிர்ணயித்த ஒரு பயணிக்கு 60 ரூபாய் ரத்து கட்டணமாக மட்டுமே வசூலிக்கப்படும் என ரயில்வே முடிவு செய்துள்ளது.
Also Read : தேர்தல் பணிமனையில் தாக்குதல் – பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
ரயில் விதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதாவது, நீங்கள் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது அது ரத்து செய்யப்பட்டாலோ, உங்களுக்கு Convenience fee என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனி டிக்கெட்டை ரத்து செய்ய பயணிகளிடம் ( RAC ) இருந்து ரூ.60 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.