உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த்(rajinikanth) தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றது.இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கொரனோ பரவல் காரணமாக இமயமலை செல்லாமல் இருந்த ரஜினி நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை முன்னதாக முடித்து கொண்டு இமயமலை சென்றார்.
ஆன்மிகப்பயணமாக சென்ற ரஜினி உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் சென்று சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் துறவிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார்.
இதனையடுத்து ஆன்மிக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில்,ஜார்கண்ட் ஆளுநரான சீ.கே.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
மேலும் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி, உத்தரபிரதச மாநில முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து லக்னோ விமானநிலையத்தில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்க்கு பதில் அளித்த அவர் ,உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினி காந்த தெரிவித்துள்ளார்.