தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ( heat wave ) தேவையான வசதிகளை செய்துதர தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்
பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்.
Also Read : பழைய சோறு நம்ம உடலில் இத்தனை மேஜிக் பண்ணுமா?
தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் ( heat wave ) சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.