Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home தமிழகம்

கொலை மிரட்டல்.. மோசடி நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் – அன்புமணி ஆவேசம்!

by devagi
April 29, 2024
in தமிழகம்
0
கொலை மிரட்டல்.. மோசடி நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் – அன்புமணி ஆவேசம்!

Congress leader Jayakumar assassination

scam company – anbumani Condemnation : மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடிகளையும், கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது..

ஆயிரக்கணக்கில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை வார்த்தைக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி வரும் கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம்,

அதன் மோசடிகளுக்கு எதிராக போராடி வரும் கோவை மாவட்ட பா.ம.க. செயலாளர் அசோக் ஸ்ரீநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடிகளையும், கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க : April 29 Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?

பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியை 9042457527 என்ற செல்பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

“நீ ஒற்றை ஆள் தான். ஆனால், நாங்கள் லட்சக்கணக்கில் இருக்கிறோம். இனியும் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் 2025-ம் ஆண்டில் நீ உயிருடன் இருக்க முடியாது.

நீ என் கையில் மட்டும் கிடைத்தால் நானே உன்னை போட்டுத்தள்ளி விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதற்கு பயன்படுத்தப்பட்ட செல்பேசி எண் மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மை வி 3 ஆட்ஸ் நிறுவனம், வலைத்தளங்கள் வாயிலாகவும், வலைக்காட்சிகள் மூலமாகவும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு,

ரூ.360 முதல் ரூ.1.20 லட்சம் வரை பணம் செலுத்தி உறுப்பினரானால் தாங்கள் அனுப்பும் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.

அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இதுவரை பல லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது.

புதிதாக உறுப்பினராக சேருவோரிடமிருந்து பணம் வசூலித்து ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்களுக்கு பணம் வழங்கும் போன்சி (Ponzi) மாதிரி மோசடி இதுவாகும். இதில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உறுப்பினராகும் அனைவரும் ஒரு கட்டத்தில் பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளது.

இந்த மோசடியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பா.ம.க. மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவை ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் மனு அளித்தேன்.

scam company - anbumani Condemnation
Anbumani Ramadoss

இதன் காரணமாகவே அசோக் ஸ்ரீநிதிக்கு மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் அஞ்சாது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே நிதி நிறுவன மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள்,

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளன. இதேபோன்ற மோசடி மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடமும் நடைபெறப்போவது உறுதி.

அதைத் தடுப்பதற்காகத் தான் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்திருக்கிறோம்.

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சக்தி ஆனந்தன் என்பவர் ஏற்கனவே வி3 ஆன்லைன் தொலைக்காட்சி நடத்தி மோசடி செய்தவர் என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் scam company – anbumani Condemnation.

ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும் கூட மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, அந்த நிறுவனத்தின் மோசடிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது.

அதனால் தான் பா.ம.க. மாவட்டச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்துள்ளது.

மோசடி நிறுவனங்களிடம் மக்கள் ஏமாறாமல் தடுக்க மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த மை வி 3 ஆட்ஸ் நிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

பா.ம.க. மாவட்ட செயலர் அசோக் ஸ்ரீநிதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : ”எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்..” முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

''எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்..'' முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

READ :- https://t.co/EmSN133krZ pic.twitter.com/0ACCJLxfWl

— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) April 29, 2024
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: Anbumani RamadossdmkPMKscam company - anbumani Condemnation
Previous Post

”எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்..” முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

Next Post

பாமக கோவை மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்!

Related Posts

BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
government officials
தமிழகம்

சொன்னதை செய்யாத அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!!

April 28, 2025
government employees
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் மெசேஜ் – 110 விதியின்கீழ் 9 முக்கிய அறிவிப்புகள்

April 28, 2025
eps and nagendran
அரசியல்

கூட்டணி அறிவிப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு..!!

April 22, 2025
Next Post
pmk party complaint MyV3 Ads

பாமக கோவை மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்!

Recent updates

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

by bhoobalan
May 7, 2025
0

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
karnataka

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com