ஒசூர் அருகே காதலுக்கு (love) பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் சேர்ந்து விஷம் (poison) குடித்து 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர், கர்நாடக மாநிலம் கோலார் பகுதி கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் தனது காதலியை தனது வீட்டிற்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து மாணவியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், வீட்டை விட்டு சென்ற காதல் ஜோடி இருவரும் கடந்த 26 ஆம் தேதி சூளகிரி அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தில் விஷம் (poison) குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதித்தனர்.
ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலன் செளந்தர்ராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, சூளகிரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.