நான் ரௌடி இல்லை; ஜோக்கர் தான் – காயத்ரி்ரகுராமிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜகவில் இணையபோவதில்லை என மதுரையில் பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம்(varichiyur selvam) பேட்டியளித்துள்ளார்.
மதுரையின் பிரபலரௌடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
நான் அணிந்திருக்கும் நகை என் மகளின் பெயரில் வாங்கியது எனது அப்பாவின் சொத்தில் ஜாலியாக வாழ்கிறேன். நான் ரௌடி அல்ல; என்னை ஜோக்கர் என்று சொல்லுங்கள், எனது குடும்பம் திமுக குடும்பம் ஆனால் நான் திமுகவில் இல்லை, பாஜகவில் நான் சேரபோவதில்லை
நகை பணம் இருப்பதால் நடிகைகள் என்னோடு ஒட்டிக்கொள்கிறார்கள், அதனால் ஜாலியாக இருப்பேன், காயத்ரி ரகுராமை நான் ஒருமுறை தான் பார்த்தேன் ஆனால் அதை திருச்சி சூர்யா தவறாக பதிவிட்டார் நான் பேசியவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதனை நீக்கம் செய்துவிட்டார்
மேலும் படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் என்று சொல்லுவார் ஆனால் நான் ரவுடி இல்லை என்று சொல்லுகிறேன்.நான் எனது அப்பா சம்பாதித்த பணத்தை நான் ஜாலியாக சுற்றி அதனை அழிக்கிறேன்,
எனக்கு எல்லாம் ஜாலிதான், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்ற கொள்கையோடு இருக்கிறேன், இப்போது பதவியில் உள்ள தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் யாராவது எதாவது தவறு செய்தால் கால் கையை உடைத்துவிடுவார் என்றார்,
மேலும் நான் எங்கு சென்றாலும் என்னிடம் ஆர்வமாக போட்டோ எடுக்கிறார்கள், நான் ரௌடி இல்லை என பாடல்கள் என கைகூப்பி கேட்டுக்கொண்டார்.