மதுரையில் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, இதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும்,
லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகே நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினர்.
மற்றும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பி.சரவணன், தமிழரசன், தவசி, எஸ்.எஸ்.சரவணன், வி.ஆர்.ராஜாங்கம்,பா.நீதிபதி, கருப்பையா, மதுரை மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அண்ணாதுரை, வில்லாபுரம் ராஜா, பா.குமார், எம்.எஸ். பாண்டியன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அம்பலம்,
சசிகலா, சரோஜா ,சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நிலையூர் முருகன், பொன்.ராஜேந்திரன், தக்கார் பாண்டி, குலோத்துங்கன், பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன், கார்சேரி கணேசன், அன்பழகன்,ராமசாமி, மகாலிங்கம், ரவிசந்திரன்,அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ராஜா, காளிதாஸ், கொரியர் கணேசன், வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர் அசோக், நகர் கழக செயலாளர்கள் விஜயன், பூமா ராஜா,
மாவட்டக் கலை பிரிவு செயலாளர் கா.அரசு, மாவட்ட இலக்கியஅணி செயலாளர் மோகன்தாஸ், பகுதி கழக செயலாளர் கருப்பசாமி, முத்துவேல், தளபதி மாரியப்பன், வண்டியூர் செந்தில்குமார், கோபி, ஜீவானந்தம், முருகேசன், சரவணன், ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன், சேனாபதி, தினேஷ்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன்,
மாமன்ற உறுப்பினர்கள் சோலை ராஜா, முத்துமாரி ஜெயக்குமார், ஜெ மாணிக்கம், மாயத்தேவன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் செல்லம்பட்டி ரகு பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் பாலகிருஷ்ணன், பள்ளப்பட்டி முருகேசன், மு.சி.சோசி.முருகன்,லதா ஜெகன், கருத்த கண்ணன், தனக்கன்குளம் மாயி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது…
அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் அப்படி போராட்டம் செய்தால் ஊதியத்தை கட் செய்து விடுவோம் என்று அரசு மிரட்டி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
இந்த அறுவை சிகிச்சையில் மூன்று நாட்கள் ஓய்வு போதும் ஆனால் மூன்று மாதம் ஓய்வு என்று மருத்துவமனை கூறி உள்ளது. ஏனென்றால், செந்தில் பாலாஜியிடம் யாரும் தகவல் பெறக் கூடாது என்ற காரணத்தினால், கடந்த ஒரு வருட பார் உரிமை பணம் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்று அடையவில்லை அதை மீட்க செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்,
அம்மா ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. கலைஞர் நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் மருத்துவமனை என்று கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சியாகும், மக்கள் யாரும் கருணாநிதி பெயர் வைக்க விரும்பவில்லை.
ஒரே ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். வந்தவுடன் ஒரே அரசாணையில் அந்த பெயர்கள் எல்லாம் திரும்பப்படும். அதேபோல், திமுக தேர்தல் கூட்டணி கட்சிகள் எல்லாம் உடைந்து போய்விடும். சாராய சாவுக்கு ஸ்டாலின் தான் முழு பொறுப்பு. வரும் ஆகஸ்ட் 20 நடைபெறும் மாபெரும் மாநாட்டிற்கு இந்த ஆர்ப்பாட்டமே முன்னோடியாக இருக்கும் என பேசினார்.