தமிழகத்தின் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காரணமாக மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு விடியவிடிய பரவலாக மழை பெய்தது. இதனிடையே திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காரணமாக மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.