கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, அந்த தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் Anbumani மட்டும் வெற்றி பெற்று டெல்லி சென்றார்.
அதே போல கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட பமக 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
தற்போது, ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தனிக் கூட்டணியோடு களம் காண்பதால், யாரோடு கூட்டணி சேர்வது என்பது குறித்து கடந்த சுமார் 1 மாதத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வருகிறது பாமக.
அதிமுக தரப்பில், முன்னால் அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமன சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கே 2 முறை நேரில் சென்று கூட்டணி குறித்துப் பேசினார்.
அப்போது அதிமுக தரப்பிடம், “ஏற்கனவே தந்தது போல 7 மக்களவை தொகுதியும் 1 ராஜ்யசபா தொகுதியும் தர வேண்டும்” என பாமக தரப்பு கேட்டதாகவும், அதற்கு 5+1 என்ற கணக்கிற்கு அதிமுக தயாராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இருந்தாலும், அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுகவோடு கூட்டணி அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார் பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ்,
அதே போல பமக தலைவர் ஜிகே மணியும், “ அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் மட்டுமே பாமகவின் எதிர்கால அரசியலுக்கு அது சரியாக இருக்கும்” என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.
அப்படி இருந்தும், அதிமுக – பாமக கூட்டணி பேச்சு வார்த்தை தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததற்கு அன்புமணி Anbumani தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
அதாவது, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக நிச்சயம் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல்கள் உறுதியாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இந்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்தால்,
போட்டியிடும் தொகுதிகளில் ஜெயிக்கியோமோ இல்லையோ, கட்டாயம் ஒரு ராஜ்யசபா சீட்டு, மத்திய மந்திரி பதவியும் வாங்கி விடலா’ம் என்பதால், பாஜகவோடுதான் கூட்டணி என்பதில் படு கறார் காட்டுகிறாராம் அன்புமணி.
தவிர, அன்புமணிக்கு ‘மணி’ கட்ட டாக்டர் ராமதாஸ், ஜிகே மணி உட்பட யாருமே தயாராக இல்லை. இதனால், அதிமுகவோடு கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், “நா டெல்லியிலே போய் பேசிக்கிறேன்..’ என கிளம்பிய அன்புமணி,
அங்கு தமிழக தேர்தல் கூட்டணி விவகாரங்களை கவனித்து வரும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள், வி.கே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தி முடித்து விட்டு வந்தார்.
அதன்படி, 10 மக்களவை + 1 ராஜ்யசபா + மந்திரி சபையில் பதவி என்பதுதான் அன்புமணியின் கோரிக்கையாக இருந்ததாம். அதற்கு, 7+1 என்ற கணக்கிற்கு பாஜக தயாராக இருப்பதாகவும், மத்திய வாரியம் ஏதாவது ஒன்றில் வாரிய தலைவர் பதவி தருவதற்கு தயார் எனக் கூறியதாகவும் தெரிகிறது.
தனது முடிவை கட்சியின் உயர்மட்ட தலைவர்களோடு நேரில் தெரிவிப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிய அண்புமணி Anbumani தற்போது டாக்டர் ராமதாஸ் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் சரிக்கட்டி விட்டதாக கூறப்படுகிறது.
ஆக, இன்னும் ஓரிரு தினங்களில் பாஜக – பாமக தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.