ஆளுநர் தமிழிசை(Tamilisai Soundararajan) வருகைக்காகக் காத்திருந்த NCC மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுச்சேரி அரசுப் பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் தின விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த நிகழ்ச்சியை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்(Governor) 3 மணியளவில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஆளுநர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேலும் NCC பள்ளி மாணவர்கள் வரவேற்பிற்காக அழைத்துவரப்பட்டு நுழைவாயில் தொடக்கத்திலிருந்து மணிமண்டபம் வாயில் வரை ஆளுநர் (Governor) செல்லும் வழி நெடுக பாதையில் இருபுறமும் NCC சீருடையில் மாணவர்கள் ஏராளமானவர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது கடும் வெயிலையும் பொருட்படுத்தாத மாணவர்கள் நெடும் நேரமாகியும் துணை நிலை ஆளுநர்(Governor )வராததால் சோர்வடைந்து மயங்கி கீழே விழுந்துள்ளனர்.இதனால் அந்த நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
மாணவர் தின விழா கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி,உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக்கல்வி இயக்குநர் சட்டமன்ற உறுப்பினர்.,ஸ்ரீ.ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் காத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.