வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழாங்கியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சில நாட்கள் தவித்தனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.அதே போல திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்த வகையில் திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் சென்னையில் சில இடங்களில் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இது குறித்த சூர்யா வெளியிட்டுள்ள ஆடியோவில், “பசங்க நிறைய பேர் தண்ணீரில் நிற்கிறார்கள். பணிகளுக்கு பிறகு காலில் மஞ்சள் பொடி, தேங்காய் எண்ணெய் பூசி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
தற்பொழுது நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது.