பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் (Instagram )கானா பாட்டுக்கு கத்தியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக வலைதளமான,இன்ஸ்டாகிராம்( Instagram),ஃபேஸ்புக்,உள்ளிட்ட பல்வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில்,சினிமா பாடல்களுக்கும் கானா பாடல்களுக்கும் ஏற்றவாறு வீடியோக்களை பலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் லைக்ஸ் களுக்காக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வரம்பின்றி எல்லையை மீறி பலரும் சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்து வீடியோ பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து சர்ச்சையை வருகிறது.
இந்த நிலையில்,கானா பாடல் ஒன்றுக்கு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கத்தியை காட்டி நடனமாடி வீடியோ வெளியிட்ட விவாகாரம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதனை அடுத்து சென்னை காவல்துறை கவனத்திற்கு இந்த வீடியோ கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்து சென்னை காவல்துறை அறிவுரை கூறினர்.
இதனைதொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை நீக்கிவிட்டு இதுபோன்று பள்ளி மாணவர்கள் சமூக வலைதளங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்து மூன்று மாணவர்களும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.