அரசு தொடக்க பள்ளிகளில் அதிகமாக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் (absenteesim teachers) பெயர் விவரங்களை உடனடியாக அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு தொடக்க பள்ளிக்கு நீண்ட காலமாக வராமால் இருக்கும் ஆசிரியர்கள் (absenteesim teachers) மற்றும் நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்…
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த விவரங்கள் அதாவது,
“நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்களின் விவரங்கள்” கோரப்படுகிறது.
மேற்காணும் விவரங்களை உடனடியாக deesections@gmail.com என்ற இணையதளம் மூலம் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளிக்கும் இந்த பட்டியலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் என தகவல் வெளியாகியுள்ளது.