ஒரே நேரத்தில் பத்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் சாதனை படைத்து அசத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது கைகளில் உள்ள பத்து விரல்களில் பத்து வண்ண ஸ்கெட்ச்களை டேப் மூலம் ஒட்டிக்கொண்டு ஒரே நேரதில் பத்து சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உருவங்களை 20 நிமிடங்களில் வரைந்தார்.
வலது கைகளில் உள்ள விரல்களால் – நேதாஜி, கொடிகாத்த குமரன், பாரதியார், ராணி வேலுநாச்சியார், சரோஜினி நாயுடு.
இடது கையில் உள்ள விரல்களால் – காந்தி, பாலகங்காதர திலகர், நேரு, வல்லபாய் பட்டேல், வ.உ. சிதம்பரனார், ஆகியோர்களை “ஒரே நேரத்தில்” பத்து சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவங்களை வரைந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய, உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களை போற்று விதமாகவும், அவர்களுடைய தியாகங்கள் நினைவுக் கூறும் விதமாகவும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் சு.செல்வம் அவர்கள் தனது இரண்டு கைகளில் உள்ள பத்து விரல்களில் பத்து வண்ண ஸ்கெட்சிகளை டேப் மூலம் ஒட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் பத்து சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உருவங்களை 20 நிமிடங்களில் வரைந்தார்.
ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தனது இரண்டு கைகளில் உள்ள பத்து விரல்களின் மூலம் ஒரே நேரத்தில்பத்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஓவியங்கள் வரைவதை ஆச்சரியத்துடன் பார்த்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பார்த்து”எலெ, நீ ஒரு பெரிய ஆர்டிஸ்ட்ன்னு நிருபிச்சிட்டல…” என்று கூறி பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.