நடப்பாண்டின் 2வது புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
அடுத்த 2 தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும்.
Also Read : அண்ணாமலை நேற்று முளைத்த காளான் – வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை..!!
கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் புயலாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயலாக இது உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.