வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னைய பொறுத்த வரையில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுநாள் மற்றும் 17ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையே நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா, சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது