“கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்”.. துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து டுவீட் (vairamuthu tweet)..
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரமான காசியான்டெப் பில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.
மேலும், இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.
மேலும், தற்போது நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 3,419 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.
துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டதுரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டனவான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டனமனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டனமாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்உலக நாடுகள்
ஓடி வரட்டும்கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
இதனையடுத்து, துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தற்போது பதிவிட்டுள்ள (vairamuthu tweet) இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.