சென்னையில் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவினாசி பரம்பொருள் அறக்கட்டளையில் மூட நம்பிக்கை பேச்சாளர் என மக்களால் விமர்சிக்கப்படும் மகாவிஷ்ணுவிடம் போலீசார் இன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மேலும் மகாவிஷ்ணுவிடம் வங்கி பண பரிவர்த்தனை, நன்கொடை விபரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை கிளைகள், நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து திருப்பூர் கனியாம்பூண்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் கூறப்படுகிறது.