சாலையில் டூ வீலரில் வந்த முதியவர் டிராபிக் போலீசை பார்த்ததும் அவசரத்தில் ஹெல்மெட்டை திருப்பி அணிந்து சென்றதை கண்டு அடக்க முடியாமல் சிரித்த காவலர் சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாகன ஓட்டிகளில் பலர் மோட்டார் வாகன விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. உதாரணமாக ஹெல்மெட் அணியாதது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாதது, அதிவேகத்தில் பயணிப்பது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியோடு மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், தென்காசியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்துக் கொண்டு அதை அணியாமல் வந்த முதியவர் ஒருவர், காவலரை பார்த்ததும் அவசரத்தில் ஹெல்மெட்டை திருப்பி அணிந்துள்ளார்.
இதனைப் பார்த்த போலீஸ் கலகலவென சிரித்துவிட்டு அவரை மடக்கிப் பிடித்து, எனக்கு பயப்பட வேண்டாம், உங்கள் உயிருக்காக பயப்படுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.