New Election Commissioners Election : “ஒருத்தரு ரிட்டையர் ஆகிட்டாரு, இன்னொருத்தர் விட்டுட்டு போயிட்டாரு.
இப்ப இருக்கிற ஒருத்தர வெச்சு தேர்தலை நடத்துன மாதிரித்தான்..” என நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் மரத்தடி விவாதம் வரை சென்று விட்டது கடந்த வாரம் 9 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா. அந்த பிரச்சனைக்குத்தான் இன்று முடிவு கட்டியுள்ளது டெல்லி.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை, ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களும் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையானது கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.
இவர்களை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது மத்திய அரசு.
அதன்படி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவர் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கம் வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும், தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி 14ம் தேதியுடன் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்ற நிலையில், மார்ச் 9 aaம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண் கோயல்.
அப்போது அவரது பதிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருந்ததால், காரணம் சொல்ல்ப் படாத அருண் கோயலின் ராஜினாமா இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியது.
இதனால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தலாம் என்பதால் தேர்தல் ஆணையர்களை விரைவாக நியமிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அதையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் கடந்த புதன்கிழமை அன்று, தேர்தல் ஆணையர் தேடுதல் குழு கூடி, இரண்டு ஆணையர் பதவிகளுக்கும் புதியவர்களை நியமிக்க 5 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்தது.
இந்த நிலையில் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த தேர்வுக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் பங்கேற்றார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-14-at-5.52.49-PM.jpeg?resize=600%2C413&ssl=1)
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்ரி, புதிய தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
யார் இந்த ஞானேஷ் குமார்?
இவர்களில் ஞானேஷ் குமார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 1988 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கூட்டுறவுத்துறை செயலாளராக பணியாற்றி கடந்த ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றார்.
இவரது கால கட்டத்தில் கூட்டுறவுத்துறையின் Multi-State Cooperative Societies (MSCS) (Amendment) Act, 2023, என்ற சட்டப் பிரிவு உருவாக்கப் பட்டதோடு 3 முக்கிய கூட்டுறவு அமைப்புகள் உருவாகவும் காரணமாக அமைந்தர்வர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-14-at-5.55.00-PM.jpeg?resize=526%2C383&ssl=1)
புகழ் பெற்ற சஹாரா ஊழல் தொடர்பாகவும் பணத்தை இழந்தவர்கள் அதனை பெறும் வகையில் தனி இணையம் ஒன்றை துவங்கியவர்.
காஷ்மீர் மாநிலத்தில் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோது, உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஞானேஶ் குமார் 2007 முதல் 2012 வரை பாதுகாப்புத்துறையில் இணை செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சுக்பிர் சிங் சந்து?
சுக்பிர் சிங் சந்து, உத்தராகண்ட் மாநில 1998ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-14-at-5.53.50-PM.jpeg?resize=299%2C168&ssl=1)
சட்டம் படித்துள்ள இவர் நகர சீரமைப்பு மற்றும் முனிசிபாலிடி மேலாண்மை குறித்த 2 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருப்பதோடு, பஞ்சாப் மாநில லூதியானா நகராட்சி ஆணியராக சிறப்பாக பணியாற்றியமைக்காக ஜனாதிபதி விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தேர்வு நடந்தது இப்படித்தானாம்..! New Election Commissioners Election
212 பேர் கொண்ட பட்டியலில் இருந்து உட்பல் குமார் சிங், பிரதாப் குமார் திரிபாதி, இன்வேடர் பாண்டே, சுக்பிர் சிங் சந்து, சுதிர் குமார் மற்றும் கங்காதர் ரஹாதே ஆகிய 6 பேரை சட்ட்த்துறை அமைச்சர் முன்னிலையில் தேர்வு செய்து அவர்களில் இருந்து ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.
அதிருப்தியில் காங்கிரஸ்
இதனிடையே, “தேர்வு செய்யப்பட்ட பெயர் விவரங்களை முன்கூட்டியே தனக்கு தெரிவிக்கவில்லை” என்று கூட்டத்திலேயே அதிருப்தி தெரிவித்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி செய்தியாளர்கள் சந்திப்பிலும் அதை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், “.தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைபட்சமாக நடந்தது; முழுமையான விவரங்கள் இல்லாமல் 212 பேர் கொண்ட பட்டியலை கொடுத்து தேர்வு கூட்டமானது அவசரகதியில் நடத்தப்பட்டது.
இறுதி பட்டியலை தருமாறு நான் கோரிக்கை விடுத்த போதும், 5 வெவ்வேறு விதமான பட்டியல்களை என்னிடம் கொடுத்தனர். ஒவ்வொரு பட்டியலிலும் 92 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதனால் இறுதி பட்டியலில் உள்ளவர்கள் யார் என்பதை நான் புரிந்துகொள்வது கடினமானதாக இருந்தது. எல்லாம், அவங்களே முடிவு பன்னிட்டாங்க. மேலும், தேர்வுக் குழுவில் அரசு சார்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பது சரியானது அல்ல” எனக் குமுறினார் செளத்ரி.