Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home Uncategorized

ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயார்..! – மா.சுப்பிரமணியன்

by itamiltv
December 25, 2021
in Uncategorized, தமிழகம்
0
ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயார்..! – மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகில் பல நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா கொரோனா வைரசை விட வேகமாக பரவும் தன்மை உடையதாக இது இருப்பதால் இதை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் போராடுகிறது.
ஒமைக்ரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைக்கவும் அனைத்து மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஒமைக்ரான தொற்று மெல்ல கால்பதித்து வேகமாக பரவ தொடங்கி உள்ளது. 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவதுறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘கூட்டம் கூடுவதை தவிருங்கள். கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே நடமாடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதே போல் ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் எதிர் கொள்ள தயாராக இருக்கும்படி சுகாதாரத்துறையினருக்கும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:-

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 7 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏதாவது அசவுகரியமாக தெரிந்தால் உடனே ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சையில் இருப்பவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று கூறப்படுவதால், ஒருவேளை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால் அதை எதிர் கொள்ளவும் அரசு தயாராக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 1¼ லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது போல் சிறப்பு மையங்களும் தயார்படுத்தப்படுகிறது. இந்த மையங்களிலும் 1¼ லட் சம் பேரை தங்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 2½ லட்சம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.

ஒமைக்ரானை பொறுத்தவரை தொற்று ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சினை போன்ற கோளாறுகள் யாருக்கும் ஏற்படவில்லை.

எனவே ஆக்சிஜன் தேவை என்பது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக வராது என்று கருதுகிறோம்.

இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 1,400 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே வராது.

அரசின் வழிகாட்டு நெறிகளை பொதுமக்கள் கடைபிடித்தால் போதும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தி விட முடியும். எல்லோரும் ஒத்துழைத்தால் ஒமைக்ரானை எளிதாக கடந்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவின் போது தொற்று உறுதியானவர்கள் தனி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த முகாம்கள் அனைத்தையும் மீண்டும் அமைக்கவும், கூடுதல் முகாம்களை உருவாக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: omicron variant in tamilnadutn government ready to face omicron
Previous Post

32 பள்ளிகளின் கட்டடங்கள் இடிக்கப்படுமா? -மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

Next Post

கோயில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்கள் மட்டும் தான்.. – தமிழக அரசு அதிரடி

Related Posts

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
government officials
தமிழகம்

சொன்னதை செய்யாத அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!!

April 28, 2025
government employees
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் மெசேஜ் – 110 விதியின்கீழ் 9 முக்கிய அறிவிப்புகள்

April 28, 2025
Next Post
கோயில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்கள் மட்டும் தான்.. – தமிழக அரசு அதிரடி

கோயில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்கள் மட்டும் தான்.. - தமிழக அரசு அதிரடி

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com