மிக்ஜாம் புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் ரூபாயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்(thirumavalavan) வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கனமழையிலும் களத்தில் இறங்கி மக்களுக்கான அமைச்சர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருந்தது என்றும் திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.
மேலும் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்த அவர்,வழக்கம் போல் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில், 5,000 கோடி ரூபாய் கேட்ட நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கி இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்,திருச்சியில் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த வெல்லும் ஜனநாயக மாநாடு டிசம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்தார்.