தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
- 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,353 மில்லியன் கனஅடியாக உள்ளது
- 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 442 மில்லியன் கனஅடியாக உள்ளது
- 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 491 மில்லியன் கனஅடியாக உள்ளது