தமிழகத்தில் தற்போது பருவமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது கன முதல் அதி கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணிகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .
அந்தவகையில் தமிழகத்தில் சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2709 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 46 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 626 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 12 கனஅடியாக சரிவு
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 435 மில்லியன் கனஅடியாக உள்ளது