தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
பெரு மழை பெய்தாலோ பெரு வெள்ளம் ஏற்பட்டாலோ குறிப்பிட்ட வழிமுறைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது .
அந்தவகையில் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம். நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரிப்பு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.
- சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிவு.
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1431 கன அடியாக குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது