மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.அதிலும் குறிப்பாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த கனமழையால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் வேறு வழியின்றி அதனை திறக்கும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாகவும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஏரிகளின் இன்றைய நிலவரம் வெளியாகி உள்ளது.
ஏரிகளின் இன்றைய நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கனஅடியில் இருந்து 50 கனஅடியாக குறைப்பு. நீர்இருப்பு 3054 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 239 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1440 கனஅடி உபரிநீர் திறப்பு. நீர்இருப்பு 790 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 750 கனஅடியாக உள்ளது.
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு முழு கொள்ளவை எட்டி 500 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 118 கனஅடியாக சரிவு.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.
- சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு – 89.75%
- 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 10.552 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது!
- செம்பரம்பாக்கம் – 90.1%
- புழல் – 92.54%
- பூண்டி – 90.5%
- சோழவரம் – 73.08%
- கண்ணன்கோட்டை – 100%