தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
திடீரென பெருமழை பெய்தாலோ பெருவெள்ளம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்தி மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2554 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம்
- 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 572 மில்லியன் கன அடியாக உள்ளது
- 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 448 மில்லியன் கன அடியாக உள்ளது
- மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4496 கன அடியாக அதிகரிப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது அணையில் நீர் இருப்பு 17.76 டி.எம்.சி. ஆக உள்ளது