கர்நாடக மாநிலத்தில், திரைப்படங்களில் வருவதைப்போல பெங்களூருவில் மேம்பாலம் ஒன்றின் மீது ஏறி திடீரென தன்னிடமிருந்த 10 ரூபாய் நோட்டுகளை கோட் சூட் அணிந்த நபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே வீசி எறிந்தார் (throwing currency).
இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதியில் இருந்த மக்கள் கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டும் முட்டிமோதிக் கொண்டும் பணத்தை எடுக்க முயன்றனர்.
மேலும், இதனை அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களும் வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டி போட்டுக்கொண்டு முயன்றனர்.
இதனால், பெங்களூரின் கே.ஆர் மார்க்கெட் மேம்பாலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் திடீரென மேம்பாலத்தின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து கீழே வீச (throwing currency) தொடங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அதற்குள் அந்த பகுதியில் இருந்து அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட அந்த நபர் கோட் சூட் அணிந்த படி நன்கு படித்தவர் போல காணப்பட்டார். மேலும், அவரது கழுத்தில் சுவரில் மாட்டும் கடிகாரம் போன்றும் தொங்கிக் கொண்டிருந்தது. மேம்பாலத்தின் இருபக்கமும் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற அந்த நபர் அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அவர் சுமார் 3,000 ரூபாய் வரை பணத்தை வாரி இறைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபோன்று செய்யப்பட்டது எனவும், அப்பகுதியில் இருந்தவர்கள் சிலர் காவல்துறையிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Bizarre in #Bengaluru#Traffic came to halt on #Sirsi Circle #flyover and the road below it (#KRMarket) after a well-dressed youth went about throwing currency notes. Who was he and why did he do it is not known. @NammaBengaluroo @WFRising @TOIBengaluru @peakbengaluru pic.twitter.com/zXB6mndKm6
— Rakesh Prakash (@rakeshprakash1) January 24, 2023