புவனேஸ்வரில் (bhubaneswar), இரண்டு மைனர் சிறுமிகள் ஒரே இரவில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வரில் (bhubaneswar), திங்கள்கிழமை இரவு பாட்டியா ரயில் நிலையத்தில், சுமார் 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு மைனர் சிறுமிகள் இரு குற்றவாளிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து புவனேஸ்வர் சைல்டு லைன் இன்ஃபோசிட்டி போலீசில் புகார் செய்து இரு குழந்தைகளையும் மீட்டது.
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாட்டியா பகுதியில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார்கள். மேலும், தற்போது இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை தேவைப்படும் நிலையில், குழந்தைகள் நலக் குழு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, என்று சைல்டுலைன் இயக்குனர் பெனுதர் சேனாபதி கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று மாலை, சிறுமிகள் இருவரும் பாட்டியா ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அவர்களைக் கடத்தி ரயில்வே மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், அவர்கள் அந்த சிறுமிகளை கயிற்றால் கட்டி வைத்து இரவு முழுவதும் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் வலியால் துடித்து அழுதுள்ளனர், அப்போது குற்றவாளிகள் சிறுமிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர் என்றும் கூறினார்.
இதனையடுத்து, இன்று காலை சிறுமிகள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியதும் நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டனர். மேலும், இந்த சம்பவத்தை மூடிமறைக்க குற்றவாளிகள் பணம் கூட வழங்கினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்ஃபோசிட்டி போலீசார், சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் அரசு ரயில்வே போலீசார் ஆகியோர் இன்று மாலை பாதிக்கப்பட்டவர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
மேலும், இது தொடர்பாக ஜிஆர்பியால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.