உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி வருவதை ரஷ்யா விரும்பாத ரஷ்யா தனிநாடாக உருவான உக்ரைனை தன்னோடு இணைத்துக் கொள்ள முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதைத்தொடந்து உக்ரைன் நாட்டின் ரஷிய படைகள் தாக்க தொடங்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் பலியானதோடு பொது மக்களும் பலியாகினர். இத்தனை தொடர்ந்து உக்கிரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை பல்வேறு நாடுகளும் மீட்டு வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறினார். உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய செலன்ஸ்கி, ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார்.
உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து விளக்கிய அவர், போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார்.