நடிகை சமந்தா (samantha) நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்ததன் காரணம் நாக சைதன்யா சமந்தாவை கருக்கலைப்பு செய்ய சொல்லி டார்ச்சர் செய்தது தான் என்று பிரபலம் ஒருவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா கெளதம் என இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன் மூலம் ஹீரோயின் ஆக நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அப்படத்தில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் சமந்தா. இந்த படத்தின் போதே இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே, இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு உறவினர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னரும், நடிகை சமந்தா சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில், உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி நான்கு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால், நடிகை சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், எது உண்மை என்பதை இதுவரை சமந்தா தரப்பினரும், நாகசைதன்யா தரப்பினரும் வெளியிடவில்லை.
இந்நிலையில், பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் உமர் சந்து என்பவர், சமந்தாவின் விவாகரத்து குறித்து ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தற்போது, அந்த ட்விட் தான் வைரலாகி வருகிறது. அதில், சமந்தாவை பொருத்தவரை நாகசைதன்யா மிகவும் மோசமான கணவர் என்றும், அவரால் உடலளவிலும், மனதளவிலும் சமந்தா டார்ச்சர் அனுபவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் சமந்தா கர்ப்பமாக இருந்த நிலையில், நாக சைதன்யா செய்த கொடுமைகளால் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் உமர் செந்தில் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.