77-வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு ஊர்வலம் சென்ற உத்தரபிரதேச(uttar pradesh) துணைமுதல்வவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடும் முழுவதும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுவெடித்து,இனிப்புகள் வழங்கி தேசிய கோடி ஏற்றி வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிலையில் உத்தர பிரதேச(uttar pradesh) துணை முதல்வர் பிரிஜேஷ் பதாக் தனது காரில் மேல்பகுதியில் நின்று கொண்டு கையில் தேசிய கொடியை காண்பித்து ஊர்வலம் சென்றார்.அப்போ அவரது கையில் இருந்த தேசிய கொடி தலைகீழாக கட்டப்பட்டிருந்தது.’
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.பாஜக துணை முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் கண்டங்களை தெரிவித்தும்,இது தான் உங்கள் தேசப்பற்றா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.