vck ravikumar | உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ரவிக்குமார் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அதற்க்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விசிக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, திமுக தரப்பில் உதயசூரியன் சின்னம் வழங்கினாலும் போட்டியிட இசைவளிப்பதாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறியதாக தெரிகிறது.
இதற்கு உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விசிக தலைமை மற்றும் உயர்நிலைக்குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது தெரிகிறது.
இதையும் படிங்க: “மகளிர் இலவச பேருந்து பயணச் சீட்டில் முதல்வர் ஓவியம்” கள்ளக்குறிச்சி ஓவியர் அசத்தல்!
அதேநேரம், 2 தொகுதிகளை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுகவிடம் இருந்து 3 தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும் என்பதில் விசிக திடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனாலேயே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் விசிகவினர் செல்லவில்லை என தெரிகிறது.
இந்த சூழலில் தான் சிதம்பர தொகுதியில் தான் போட்டியிடுவேன் அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துவிட்டார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1763447465087512930?s=20
இதேபோல், விழுப்புரத்தில் ரவிக்குமாரும், பொதுத் தொகுதியான கள்ளக்குறிச்சி அல்லது கடலூரில் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வகையில் திட்டமிட்டு விசிக தன்னுடைய காய்களை நகர்த்தி வருகிறது.
இதற்கு செக் வைக்கும் விதமாக 4 கட்சிகளுடனான தொகுதி பங்கீடு உடன்படிக்கையை திமுக முடித்துள்ளது.
தற்போது விசிகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில்,திமுகவின் கருத்தை விசிக ஏற்குமா அல்லது தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.