நவம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். அது காங்கிரஸ் கூட்டணியாக இருக்கலாம் இல்லை என்றால் பாஜக கூட்டணியாக கூட இருக்கலாம். இல்லை என்றால் தனித்து கூட போட்டி இடலாம் – டிடிவி தினகரன் பேட்டி.
தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன்..
மக்கள் வரிப்பணத்தை, சுற்றுச் சூழலை, கடல் வளத்தை, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் திமுக அவரது தலைவருக்கு, தனியாக ஒரு இடத்தில் கட்சியின் நிதியை வைத்து நினைவுச்சின்னம் அமைப்பது தான் தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
- தொண்டர்களின் விசுவாசம் தான் ஒரு கட்சியின் அச்சாணி.
- என்னை கட்சியிலிருந்து நீக்கி ஆறு வருடம் ஆகிறது நான் தனி கட்சி தொடங்கி ஆறு வருடம் ஆகிறது.
- முனுசாமி ஒரு பக்கம் உளறுகிறார் தர்மாகோல் விஞ்ஞானி செல்வராஜ் ஒரு பக்கம் பயத்தில் உலறுகிறார்கள்.
- கொடைநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா .?
- ஜெயக்குமார் எதற்கு சந்தில் சிந்து பாட வேண்டும்.
- தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் ஆகிவிடுவாரா?
நவம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். அது காங்கிரஸ் கூட்டணியாக இருக்கலாம். இல்லை என்றால் பாஜக கூட்டணியாக கூட இருக்கலாம். இல்லை என்றால் தனித்து கூட போட்டி இடலாம் என்று கூறியுள்ளார்.