பொருளாதார நெருக்கடியால், ஐபோன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையையே ஒரு தம்பதியினர் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வரும் ஷதி-ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த தங்கள் குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் தேவைப்பட்ட நிலையில், அதனை வாங்க இப்படி ஒரு காரியத்தை செய்து உள்ளனர் அந்த தம்பதி. தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை கண்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையையும் காணாததால் சந்தேகமடைந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அந்த தகவலை பேரில், போலீசார் குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் தந்தை ஜெயதேவ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாய் ஷதி 8 மாத குழந்தையை விற்று அந்த பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று பகீர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பெற்ற குழந்தையையே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் தேவைப்பட்ட நிலையில் விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.