இந்தியாவில் விரைவில் 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், சிறப்பு முக்கியத்துவம் அடிப்படையில் (women Employment) 75,000 பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அமைத்துத் தரவும்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொடுத்துள்ள தாறுமாறான அப்டேட்டில் கூறிருப்பதாவது :
மீன்வளத் துறையை முறைப்படுத்துதல் மற்றும் மீன்பிடி குறு மற்றும் சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், PM-MKSSY திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, அடுத்து வரும் 4 நிதியாண்டுகளுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 40 லட்சம் சிறு குறு மீன்பிடி நிறுவனங்களுக்கு தேவையான டிஜிட்டல் தளங்கள் உருவாக்குதல், 6.4 லட்சம் குறு நிறுவனங்களுக்கும்,
5,500 மீன்பிடி கூட்டுறவு நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் கடன் வழங்குதலும் திட்டமிடப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் செயல்திறனை ஊக்குவிக்கும் வகையில், மானியங்களை படிப்படியாக உயர்த்துதல், மீன் வளர்ப்பில் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து காப்பீடு மூலம் தீர்வு காணுதல்
மதிப்பு கூட்டுதல் மற்றும் மதிப்பை உருவாக்குவதன் மூலம் ஏற்றுமதியில் உள்ள போட்டியை மேம்படுத்துதல், மீன் மற்றும் மீன்வளத்துறையின் பொருட்களுக்கான தரத்தை
உள்நாட்டுச் சந்தையில் மேம்படுத்துதல் பல விதமான வளர்ச்சி பணி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் விரைவில் 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், சிறப்பு முக்கியத்துவம் அடிப்படையில் 75,000 பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அமைத்துத் தரவும் அமைத்துத் தரவும்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நம் இந்திய திருநாட்டில் ஏற்கனவே பெண்கள் பல துறைகளில் சாதித்து வரும் நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு முன்னுரை கொடுத்து வருகிறது.
Also Read :https://itamiltv.com/business-on-fake-bill-gst-registration-will-be-blocked/
விளையாட்டு படிப்பு உலக புகழ் பெற்று விளக்கும் தொழில் நிறுவனங்கள் (women Employment) என அனைத்தும் பெண்கள் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில்
அரசும் அவர்களுக்கு ஊக்குவித்து அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.