ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் ( mariyappan thangavelu ) தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த மாபெரும் தொடரில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திட்டத்தட்ட 171 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர் .
இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் .
கடந்த முறை நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த பதக்கமும் வெல்லாமல் நாடு திரும்பி இருந்த மாரியப்பன் இந்த முறை விடாமுயற்சியுடன் அயராது உழைத்து இம்முறை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதையடுத்து தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசியல் தலைவர்கள் ( mariyappan thangavelu ) திரை பிரபலங்கள் என ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.