மெக்சிகோவில் செல்ஃபி மோகத்தால் இளம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் ( Mexico ) சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
மெக்சிகோ நாட்டில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட நீராவி இரயில் எஞ்சின், தனது பயணத்தை நிறைவு செய்வதால் உள்ளூர் மக்கள் அதனை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனது வழித்தடத்தில் இயக்கப்பட்ட நீராவி இரயிலை பலரும் ஆர்வத்துடன் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தனர் . அப்போது பெண் ஒருவர் இரயில் தண்டவாளத்தின் முன்பு நின்றவாறு செல்பி எடுக்க முயற்சித்தார்.
அதிவேகத்தில் வந்த இரயில் தண்டவாளத்தின் முன் நின்ற பெண் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்தியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
ரயில் முன் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பெண் நொடி பொழுதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் ஆபத்தை உணராமல் செல்ஃபி மோகத்தால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவது நவீன ( Mexico ) காலத்தின் சாபக்கேடு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.