மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி செ.ராமலிங்கம் தொகுதி மக்களுக்கு திமுக எம்.பி. உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி:
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.
திமுக போட்டியிடும் தொகுதிகள்:
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது”
இதையும் படிங்க: “பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்”* – ஸ்டாலினின் அந்த கடிதம் யாருக்கு தெரியுமா?
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். மேலும் திமுக சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
திமுக எம்.பி உருக்கம்:
இந்த நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செ.ராமலிங்கம். இந்நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து தற்போதைய எம்.பி. செ.ராமலிங்கம், வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வெற்றிகளால் அடக்கத்தையும், தோல்விகளால் ஊக்கத்தையும் பெறக்கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை’’
என கருணாநிதி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ‘‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றி’’ என தெரிவித்துள்ளார்.