ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ பேட்டி…
கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியை நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ மேற்கொண்டார்.
முன்னதாக பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசுகையில்,
கோவிலை சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோயில்களை சுத்தம் செய்தால் நம்மை பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். இன்றைக்கு நாட்டில் கோயில்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் அது தான்.
மோடி அதை துவக்கி வைத்தார். இது இன்றைக்கு இந்த ஒரு கோயிலுடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சுத்தம் செய்வோம்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால் உண்மையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாக, 500 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று காத்திருக்கிறோம்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை மறுபடியும் ஒரு இடத்தில் பார்க்க போகிறோம். ரொம்ப பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது என்றும்,
ராமர் கோயிலை பொறுத்தவரை சாதி மதம் கிடையாது. முழுக்க முழுக்க
நம் ஒற்றுமையை காட்ட தான் மந்திரம் சொல்கிறோம்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியவர், ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே உள்ள சிறுமிக்கு கொடுமை நடந்திருக்கிறது.
வெளியே வந்து அந்த காயங்களை காட்டியதாகவும், ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
விழுப்புரத்தில் 10 வது படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறிய குஷ்பூ, எப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யவில்லை.
அவர்கள் என்னிடம் பேசி நான் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறேன் என்றும், நீங்கள் கேஸ் வாபஸ் வாங்குங்கள் என்று அவர்களை மிரட்டுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள்.
திமுகவிற்கு மட்டும் இன்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும் திமுகஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். கருணாநிதி பிரச்சினையை பார்த்து விட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்க போகிறார்?
அவர்கள் கட்சியினர் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் இதை பற்றி எதுவும் பேசினாரா? ஆறுதல் சொன்னாரா ? இது தவறு. நடந்திருக்க கூடாது. நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றுஎதுவும் சொன்னாரா?
பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சி என்றாலே பாஜக என்று பார்க்கிறார்கள். தமிழகத்தில் மிக பெரிய இடத்தில் பாஜக உள்ளது.
அண்ணாமலை ஒரு விஷயம் சொல்லும் போது எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும் எனவும், காயத்ரி ரகுராம் அதிமுகவில் சேர்ந்ததை பற்றி எதுவும் நினைக்கவில்லை என்றும் கூறினார்.