2024 –TN budget |தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, முழுவதுமே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்திருப்பது மட்டும்தானே தவிர, புதிய திட்டங்கள் எதையும் திமுக அறிவிக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, முழுவதுமே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்திருப்பது மட்டும்தானே தவிர,
புதிய திட்டங்கள் எதையும் திமுக அறிவிக்கவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையில், 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு,
நிதி நிலை அறிக்கையில் 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறது. ஆனால் உண்மையில் அரசுப் பணிகள் வழங்கப்பட்டது 10,400 பேருக்கு மட்டுமே.
ஆனால் நமது பிரதமர் மோடி 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறார்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பிரதமரின் கிராம சாலை திட்டம், முதல்வரின் கிராமச் சாலை திட்டமாக உருமாறியிருக்கிறது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரிலேயே, வங்கிகள் கடன் உதவி வழங்குகின்றன.
இதில் திமுக அரசின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. சகி நிவாஸ் என்ற பெயரில், மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் விடுதிகளுக்கு, தோழி விடுதி என்று பெயர் மாற்றி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது திமுக.
மக்களுக்கு எதிராக, வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறது திமுக. கோபாலபுரத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுகிறது.
பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து, மத்திய அரசின் மீது பழி போட்டு அரசியல் செய்கிறது திமுக(2024 –TN budget)
பஞ்சு மிட்டாயில் இருக்கும் நிறத்திற்குத் தடை விதித்திருக்கும் திமுக, தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால்,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1759808314979103036?s=20
அதை விட பல மடங்கு உடல் நலனுக்குக் கெடுதலான டாஸ்மாக் சாராயத்துக்கு தடை விதிக்கவில்லை.
மத்திய இணையமைச்சர் அண்ணன் முருகன் அவர்களுக்குத் தகுதியில்லை என்று கூற டி.ஆர்.பாலுவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்டாலின், உதயநிதி, டி.ஆர்.பி.ராஜா இவர்கள்தான் தகுதியற்றவர்கள்.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில், ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கட்டி அணைத்த திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியினர் எப்படி வாக்கு சேகரிக்கப் போகிறார்கள்?
இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு பயந்து, இரண்டு பங்காளிக் கட்சிகளும் ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன என அண்ணாமலை தெரிவித்தார்.