நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ( 4th phase polling ) உள்ள 96 தொகுதிகளில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுசேரியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது . இதையடுத்து கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
பின்னர் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, உத்தரப் பிரதேசம்,உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து இன்று ஆந்திரா- 25, தெலங்கானா – 17, பீகார் 5, ஜம்மு -1, ம.பி. 8, மகாராஷ்டிரா 11, ஒடிசா 4, உ.பி. 13, மே.வங்கம் 8, ஜார்க்கண்ட் 4 தொகுதிகள் உட்பட 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ( 4th phase polling ) வாக்கு பதிவின் போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.