6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது.. பகீர் சம்பவம்!
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அந்த சிறுமி மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.
ஆனால் யார் இந்த கொடூரத்தை செய்தது யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்த சிறுமி, தினமும் தலைமை ஆசிரியர் கோவிந்த் நாத் உடன் பள்ளிக்கு சென்று வந்ததாக சிறுமியின் தாய் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திருப்பதி லட்டு சர்ச்சை : பவன்கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி!
இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதில், ” சம்பவத்தன்று காலை 10.20 மணியளவில் சிறுமியை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்ற அவர் பள்ளிக்கு செல்லும் வழியில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனை எதிர்த்த அந்த சிறுமி கத்த ஆரம்பித்துள்ளார். கத்துவதைத் தடுக்க சிறுமியின் கழுத்தை அவர் நெரித்ததில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
பின்னர், பள்ளிக்கு வந்ததும் அவர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் மாலை 5 மணியளவில், யாரும் இல்லதாக நேரம் பார்த்து சிறுமியின் உடலை பள்ளி கட்டிடத்தின் பின்னால் வீசிவிட்டு, அவரது பள்ளி பை மற்றும் காலணிகளை வகுப்பறைக்கு வெளியே போட்டு விட்டதாகவும்” தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோவிந்த் நாத்தை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.