இந்து சமய அறநிலையத்துறை கோவில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்(thirumavalavan) வலியுறுத்தி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்(thirumavalavan) சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்தில் சந்தித்தார் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
மதிமுகவின் 29 ஆவது பொதுக்குழு வருகின்ற 14-ம் தேதி நடைபெற இருக்கிறது, மதிமுகவில் 1401 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.மேலும் திருமா அவர்கள் வாழ்த்து சொல்ல வந்தது மனதில் ஒரு எழுச்சியையும், ஊக்கத்தை தருகிறது என்றார்.
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று தெரிவித்தார் இந்த விவகாரத்தில் இன வெறியுடன் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன்,
மதிமுக பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சிறப்பாக செயல்படும் என்றும் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு அறமாக மதிமுக உள்ளது என்றார்.
இன்று மாலை எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு அழைப்பு விடுக்க வருகை தந்ததாகவும் மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக சார்பில் துறை வைகோ பங்கேற்க உள்ளார் என்றும் கூறினார்.
விழுப்புரம் மேல்பாதி ஊரில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும் பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.