மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நரேன்.
இதனையடுத்து அவர் ’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’ ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நரேன்.
மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் நரேன், மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்ட நிலைஇயில் இந்த தம்பதிக்கு தன்மியா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/Cht8xn5Ll_s/?utm_source=ig_web_copy_link