கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
ஒரு எதிர்க்கட்சித் தலைவரை ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார், கரப்பான் பூச்சி போல் சென்றார் என்று முதல்வர் ஸ்டாலின் பதவியை மறந்து தன்னிலை மறந்து விமர்சிக்கிறார்.
எதிர்க்கட்சியினரை நாங்கள் தவறாக விமர்சிக்கவில்லை; எங்களைப்பற்றி ஆளும் கட்சியினர் தவறுதலாக விமர்சித்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். அதேபோல அ.தி.மு.க.,வின் திட்டங்களுக்கு தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது; பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர்:
கோவை-க்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் அத்திகடவு – அவினாசி போன்ற எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு இப்போது திறந்து வைக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எல்லாம் வேண்டுமென்ற ஆமை வேகத்தில் நகர்கின்றன. கோவை விமான நிலைய விரிவாக்க பணி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றன. .
வெள்ளலூர் ரூ.168 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் 50% பணிகள் முடிந்த பிறகும் அதை கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
தி.மு.க.அரசு பொய்யான நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது அவற்றை செயல்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.” என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது .தேர்தல் நேரத்தில் தான் இது குறித்து சொல்ல முடியும்” என தெரிவித்தார்.