Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home தமிழகம்

வக்பு சட்ட திருத்தம் : மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை!!

by devagi
August 8, 2024
in தமிழகம்
0
மக்களவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவது உறுதி – செல்வப்பெருந்தகை!

Selvaperundagai

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

“இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தெளிவாக கூறுகிறது. அதனால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவை பற்றி உறுப்புகள் 25 முதல் 28 வரை தெளிவாக கூறுகின்றன.

இந்நிலையில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிற பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மூன்றாவது முறை ஆட்சியில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக மோடி பொறுப்பேற்றாலும், அவரது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை.

அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 1954-ல் பிரதமர் பண்டித நேருவின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்தை பறிக்கிற வகையில் அச்சட்டத்தை திருத்துவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது.

இத்திருத்தத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்கிய சொத்துக்களான வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் இச்சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தலையிட முற்பட்டிருக்கிறது.

வக்பு வாரிய சட்டத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், புதிய மசோதாவில் ஏற்கனவே இருந்த வக்பு சட்டத்தில் உள்ள உறுப்பு 40-ன்படி எது வக்பு சொத்து என்பதை வக்பு வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!

இத்திருத்தங்களின் மூலம் வக்பு வாரியத்தின் சொத்துக்களை தனது சொத்து என்று முடிவெடுக்கிற அதிகாரத்தை பறிக்க முயல்கிறது. மேலும், வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களையும், இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அதில் உறுப்பினர்களாக நியமிக்க இத்திருத்தம் வகை செய்கிறது.

இது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாகும். இந்த சொத்து குறித்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தின்படி இதை முடிவு செய்வது வக்பு தீர்ப்பாயம்தான்.

இந்தியா முழுவதும் வக்பு வாரியத்திற்கு 8.7 லட்சம் எண்ணிக்கையிலான சொத்துகளில் 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனுடைய மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இதன்படி வக்பு சொத்துகள் இந்தியாவில் மூன்றாவது பெரிய உரிமையாளர் என்ற நிலையில் இருக்கிறது.

இத்தகைய சொத்துகளை நிர்வகிக்கிற உரிமையை வக்பு வாரியத்திலிருந்து அபகரித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக பறிக்கிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சியை முஸ்லிம் அமைப்புகளும், இந்தியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

இஸ்லாமிய சமுதாயத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதுகுறித்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தையோ அல்லது வக்பு அமைப்புகளையோ, அதைச் சார்ந்த தலைவர்களையோ கலந்து பேசாமல் தன்னிச்சையாக எதேச்சதிகாரமான முறையில் சிறுபான்மையின சமுதாயத்திற்கு எதிராக வக்பு சட்ட திருத்தத்தின் மூலம் கடுமையான அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

தற்போது இத்திருத்தத்தின் மூலம் சொத்து உரிமையை நிர்ணயம் செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களை பாதுகாக்கிற வகையிலும், பலவிதமான சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமன காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு குரல் எழுப்புகின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: Selvaperundagaiசெல்வப்பெருந்தகைமோடி அரசுவக்பு சட்ட திருத்தம்
Previous Post

வயநாடு நிலச்சரிவு : நிவாரண பணிக்காக ரூ.2 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் பிரபாஸ்..!!

Next Post

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் – சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் வெளியிட்ட புதிய தகவல்..!!

Related Posts

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
government officials
தமிழகம்

சொன்னதை செய்யாத அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!!

April 28, 2025
government employees
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் மெசேஜ் – 110 விதியின்கீழ் 9 முக்கிய அறிவிப்புகள்

April 28, 2025
Next Post
Metro Rail Project

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் - சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் வெளியிட்ட புதிய தகவல்..!!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com