புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read : தூங்கியது ஒரு குற்றமா..? தனியார் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ஊழியர்..!!
மேற்படி கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற whatsapp எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.