இந்தியாவின் சந்திரயான் 3 ரோவர் மற்றும் சீனாவின் Chang’e 4 ரோவர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் நிலவில் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி ஆராச்சி நிலையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
திட்டத்தட்டபடி 41 நாட்கள் பயணத்திற்கு பின் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.1 மணியளவில் சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது .
இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் பிரக்யான் தனது ஆய்வு பணிகளை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நிலையில் நிலவின் நிலையான வெப்ப அளவு குறித்த முதல் தகவலை அனுப்பியது .

மேலும் இந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் நிலவின் தரைப்பரப்பில் சென்று பல்வேறு ஆய்வகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 ரோவர் மற்றும் சீனாவின் Chang’e 4 ரோவர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் நிலவில் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 ரோவர்களுக்கு இடையே தோராயமாக 1891 கி.மீ. தூரம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது .