bank fraud case –லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ரூ.34.11 கோடிசொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த லாவண்யா கோல்டு ஜுவல்லர்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் 65 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை விசாரணை துவங்கியது.
தொடர் விசாரணையில் வங்கியில் தவறான நகை இருப்பை கணக்கு காட்டி கடன் வாங்கியதும் , வாங்கிய கடனை தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல்,
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 60 முதல்100 சதவீதம் வரை ஆண்டு வட்டி என்ற அடிப்படையில்
அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்தது தொழில் அல்லாத விவகாரத்தில் வங்கி கடனை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும், நகை கடைகளில் உள்ள தங்க கட்டிகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது அதை பிட்காயின்களில் முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க :CPM party- ” பாஜகவிற்கு எதிராக பிப்.8-ம்தேதி.. -கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்!
வெளிநாடுகளில் பிட்காயினில் முதலீடு செய்து கணக்கில் வராத வருமானமாக சொத்துக்களை குவிந்துள்ளனர்.
இதனையடுத்து சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சுமார் 34.11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.65 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சென்னை, கோவையில் உள்ள லாவண்யா கோல்டு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு
சொந்தமான பல்வேறு இடங்களில் பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில் லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனம், வெளிநாடுகளில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதுதெரியவந்தது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1753293570948354534?s=20
பழங்கால நகைகள், தங்க நகைகளைதயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கி,
அந்த தொகையை லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், தங்க கட்டிகள்,நகைகளை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து,
கிரிப்டோ கணக்குகள் மூலம் வருமானத்தை காட்டியிருப்பதும், அந்த வருமானத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருப்பதாக கணக்குகள் (bank fraud case) காட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை இந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.34.11 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.